நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் அம்பேத்கர் சிலையை அரசு விழாவாக நடத்த திறக்க வேண்டும் 

Jul 18, 2026 - 17:41
Jul 18, 2026 - 17:55
 13
நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் அம்பேத்கர் சிலையை அரசு விழாவாக நடத்த திறக்க வேண்டும் 

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் அம்பேத்கர் சிலையை அரசு விழாவாக நடத்த திறக்க வேண்டும் 

 பொதுமக்கள் உள்ளிட்ட 9 நபர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் பா ரஞ்சித்தின் நீளம் பண்பாட்டு மையம் 
பொதுச் செயலாளர் உதயா  வேண்டுகோள் 

சேலம் கெங்கவல்லி பகுதியில் உள்ள ஓதியத்தூர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலையில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இரவில் எடுத்து விட்டதாகவும் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது இதற்கு யார் காரணம் என்று விசாரிக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளிட்ட 9 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களின் செல்போன்களும் பதிக்கப்பட்டது இந்த நிலையில்
 அந்த பகுதிக்கு இயக்குனர் பா ரஞ்சித்தின் நீல பண்பாட்டு மையத்தின் சார்பில் பொதுச் செயலாளர் உதயா உள்ளிட்ட குழுவினர்  பொது மக்களை சந்தித்து அமைதியை ஏற்படுத்தும் விதமாகவும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத விதமாகவும் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஈடுபட்டனர்

 மேலும் பொது மக்களை சந்தித்து அம்பேத்கர் சிலையை திறப்பதற்கான முயற்சியிலும் அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் பேச்சு வார்த்தையின் போது ஒன்பது நபர்கள் மீது போடப்பட்ட வழக்கும் சில பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கம் திரும்ப பேர வேண்டும் மேலும் அம்பேத்கர் அவர்களின் சிலையை அரசு விழாவாக எடுத்து திறந்து வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விதித்தனர் பொதுவாக அம்பேத்கர் என்பது சட்ட மாமேதை அவர் இந்தியாவை காண சட்டத்தை வழங்கினார் அனைவருக்கும் பொதுவானவர் டாக்டர் அம்பேத்கர் இங்கு உள்ளவர்கள் கண்ணிற்கு தான் பிரச்சனை அம்பேத்கர் அவர்கள் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போல வைக்கப்பட்டுள்ளது சிலை அவர்களுக்கு தவறாக தெரிகிறது அவர்களின் கண்ணில் தான் பிரச்சனை எனவே தற்போதுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை ஏற்று தமிழக வெற்றி கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கையை பா ரஞ்சித்தின் நீளம் பண்பாட்டு மையத்தின் பொதுச்செயலாளர் உதயா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்

பேட்டி
உதயா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow