சேலம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓமலூர் கிளை மேலாளர் ஹரி பிரசாத்தை கண்டித்து, அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Jul 22, 2026 - 08:48
 117
சேலம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓமலூர் கிளை மேலாளர் ஹரி பிரசாத்தை கண்டித்து, அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓமலூர் கிளை மேலாளர் ஹரி பிரசாத்தை கண்டித்து, அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 சேலம் போக்குவரத்துத் தலைமை அலுவலகம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அலுவலகம் முன்பு, ஓமலூர் பனிமலையில் ஓட்டுநர் குமார் என்பவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில், ஓமலூர் கிளை மேலாளர் ஹரி பிரசாத், சாதிய விரோதப் போக்குடனும், அடாவடியான போக்குடனும் நடந்துகொண்டு தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற வகையில் நடந்துகொண்டு வருகிறார். அவரால் பாதிக்கப்பட்ட குமார் மட்டுமல்ல, அந்த ஓமலூர் கிளையில் பணிபுரியும் முன்னூறுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சக ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பணியில் ஈடுபடும் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பேட்டி: அர்ஜுனன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow