அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தபால் வாக்கு படிவம் வழங்கும்போது திமுகவினர் நெருக்கடி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தபால் வாக்கு படிவத்தை திரும்பப் பெற மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு

Mar 26, 2026 - 10:52
 24
அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தபால் வாக்கு படிவம் வழங்கும்போது திமுகவினர் நெருக்கடி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தபால் வாக்கு படிவத்தை திரும்பப் பெற மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு

அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தபால் வாக்கு படிவம் வழங்கும்போது திமுகவினர் நெருக்கடி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தபால் வாக்கு படிவத்தை திரும்பப் பெற மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை யில் சேலம் கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் தபால் வாக்கு படிவத்தை வழங்கும் போது திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்து தபால் வாக்கில் திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர். சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுபோன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில துணை செயலாளர் பொன் தனபாலன், சேலம் மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் குணசேக ரன், தலைவர் ராஜ்குமார், பொருளாளர் அருள்மொழி, மத்திய சங்க துணைத் தலைவர் அந்தோணிராஜ் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர் வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிருந்தாதேவியிடம் புகார் மனு அளித்தனர். அதில் தபால் வாக்கு வழங்கும் ஊழியர்களுக்கு திமுக தொழிற்சங்க நிர்வாகி கள் நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி, அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் மற்றும் பொது மேலாளர் மோகன்குமார் ஆகியோரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விநி யோகம் செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தேர்தல் நாளில் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு படிவத்தை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் யாருடைய நெருக்க டியும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow